யோஹன் அத்தியாயம் ஒன்று, துருவநட்சத்திரம் படங்களில் நடிக்கயிருந்த விஜய், சூர்யா ஆகிய இருவரும் கெளதம்மேனனை கைவிட்டபோதும், அஜீத், சிம்பு ஆகிய இருவரும் அவருக்கு தக்க சமயத்தில் கைகொடுத்துள்ளனர்.
அதனால் அடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மார்க்கெட்டில் தனக்கு ஏறபட்டிருக்கும் தொய்வு நிலையை சீர்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தீவிரம் காட்டுகிறார் கெளதம்மேனன்.
இந்நிலையில், வாலு, வேட்டைமன்னன் மற்றும் பாண்டிராஜ் இயக்கும் படம் என பல படங்களின் வேலைகள் இருந்தும், கெளதம்மேனனின் நிலையை புரிந்து கொண்டு அவர் படத்துக்கு உடனடியாக கால்சீட் கொடுத்து நடித்து வருகிறார் சிம்பு.
இதனால் ஜனவரிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து விட இரவு பகலாக படப்பிடிப்பு நடத்தி வருகிறாராம் கெளதம்மேனன்.
இதையடுத்து, வீரம் பொங்கலுக்கு திரைக்கு வந்ததும், பிப்ரவரியில் அஜீத் படத்தை இயக்குகிறார் கெளதம். அதனால் அதற்குள்ளாக சிம்பு நடிக்கும் படவேலைகளை முடித்து விட வேண்டும் என்றுதான் இப்படி விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி வருபவர், இரண்டு படங்களுக்கான கதாநாயகி வேட்டையும் தற்போது தீவிரமாக நடத்தி வருகிறார்.
ஒருவேளை அவசரத்திற்கு கோலிவுட் முன்னணி நடிகைகள் யாரும் கிடைக்காவிடில் தெலுங்கு, இந்தி நடிகைகளை இறக்குமதி செய்யவும் முடிவெடுத்திருக்கிறார்களாம் கெளதம்மேனன்
0 comments:
Post a Comment